#

உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள் MY V3 ADS-ல்.. WHATS APP செய்யுங்கள் - 99947 19127
.

மீண்டும் தெலுங்கு திரையுலகுக்கு செல்லும் அனிருத்

🔔இன்றைய சினிமா அப்டேட் ஹைலைட்ஸ்🔔

* மீண்டும் தெலுங்கு திரையுலகுக்கு செல்லும் அனிருத்

* பந்தா இல்லாத நடிகை - இயக்குனர் மாதேஷ் ஆச்சரியம் 

* பிக்பாஸ் ஆரவின் உதவி

* இயக்குனர் சங்கர் படத்தில் இணையும் ஆலியா பட்

மீண்டும் தெலுங்கு திரையுலகுக்கு செல்லும் அனிருத்

* இசையமைப்பாளர் அனிருத், அடுத்ததாக தெலுங்கு படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் ஏற்கனவே தெலுங்கில் ‘அஞ்ஞாதவாசி’, ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’ போன்ற படங்களுக்கு இசையமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்தா இல்லாத நடிகை - இயக்குனர் மாதேஷ் ஆச்சரியம் 

* ‘சண்டக்காரி’ படத்தில் நடிகை ஸ்ரேயாவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து இயக்குனர் மாதேஷ் கூறியதாவது: “மும்பை கதாநாயகிகள் என்றாலே பந்தா பண்ணுவார்கள். தாமதமாக வருவார்கள். பாதுகாப்பு படையுடன் வருவார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன். என் கதைக்கு ஸ்ரேயா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய சென்றேன்.  உள்ளுக்குள் பயம் இருந்தது. ஆனால் நான் பயப்பட்ட மாதிரி ஸ்ரேயா இல்லை. பந்தாவும் இல்லை. பாதுகாப்பு படையும் கேட்கவில்லை. சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். எந்த தொல்லையும் கிடையாது. அவருக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், ‘செட்’டை விட்டுப்போகமாட்டார். மற்ற நடிகர்கள் நடிப்பதை பார்த்துக்கொண்டிருப்பார்’’ என்றார் மாதேஷ்.

பிக்பாஸ் ஆரவின் உதவி

* பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். சரண் இயக்கிய ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் ஹீரோவானார்.  தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் நடிகர் ஆரவ், தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இந்த ஊரடங்கால் தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றன. இத்தகைய சமயத்தில் அவற்றுக்கு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து உதவுவோம். நானும் என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என குறிப்பிட்டுள்ள ஆரவ், தெரு நாய்க்கு உணவளிக்கும் வீடியோவையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் ஷங்கர் படத்தில் இணையும் ஆலியா பட்

* இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடிக்க உள்ளாராம். 

Post a Comment

0 Comments